ஜவுளி நிறுவனங்களுக்கு செக்..! 100க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ரெய்டு.. என்ன காரணம்? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜவுளி நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. ஜவுளி நிறுவனங்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வணிக வரித்துறையினருக்கும் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டன.

Sudden raid on more than 100 places of textile companies in tamil nadu

இந்த புகார்களின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் மட்டும் போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 6 இடங்களிலும், சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 இடங்களிலும், ஆர்எம்கேவி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 இடங்களிலும், நல்லி சில்க்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு இடத்திலும் என 13 இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல சென்னையில் 39 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், மதுரையில் 13 இடங்கள் என ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் 103 இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+