டாஸ்மாக் கடைகளுக்கு சண்டே லீவு... இன்றே குவிந்த குடிமகன்கள் - முழுவதுமாக மூடப்படுவது எப்போது
முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையடுத்து மதுபான கடைக்கு விடுமுறை விடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றே இரண்டு நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர் குடிமகன்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகளும் தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு லாக்டவுன்
வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே, ஜனவரி 2, 9,16 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நான்காவது வாரமாக நாளைய தினம் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் செயல்படாது.

ஆட்டோ டாக்ஸி
பொது போக்குவரத்துக்கு அனுமதியில்லை. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

குவிந்த குடிமகன்கள்
இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இன்றைய தினமே ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். இரண்டு நாட்களுக்குத் தேவையான சரக்குகளை பைகளில் வாங்கிச் செல்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தில் விடுமுறை
தமிழகத்தில் ஏற்கனவே, ஜனவரி 2, 9,16 முழு ஊரடங்கு நாளிலும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல் நாளையும் டாஸ்மாக் கடை அடைக்கப்பட உள்ளது. வரும் 26ஆம் தேதி குடியரசுத் தினத்தன்றும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மூடப்படுவது எப்போது
கடந்த காலங்களில் கொரோனா பரவல் அதிகரித்த போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications