தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்.. மோடியிடம் கோரிக்கை வைத்த பொன்முடி
சென்னை: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
Recommended Video
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டரும் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை நிகழ்த்தினார். அனைவரையும் வரவேற்ற அவர் உயர்கல்வியில் தமிழகம் தலை சிறந்து திகழ்வதாக கூறினார்.
பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாது வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும் என்று கூறினார். அவர் பேசியதாவது: டாக்டருக்குப் படித்தவர்கள் எப்படி தனியாக மருத்துவமனைகள் தொடங்குகிறார்களோ அது போல பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சிறு சிறு தொழிற்கூடங்களை தொடங்கி தொழில் முனைவோர்களாக வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் உயர்கல்வியில் பதக்கங்களை பெறுகிறார்கள். மாணவிகள் அதிக அளவில் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் தமிழக அரசு சார்பில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்தியாவிலேயே மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவித்த ஒரே முதல்வர் நமது முதல்வர்தான்.
மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% சதவிகித இட ஒதுக்கீட்டையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உண்டான விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்கள்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாண்புமிகு பிரதமர் அவர்களிடம், பணிவன்போடு நான் வேண்டிக்கொள்கிறேன். தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பணிவன்போடு நான் மீண்டும் ஒருமுறை நம்முடைய பிரதம அமைச்சர் அவர்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அவர் நிச்சயமாக தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு உதவுவார் என நம்பிக்கையோடு மீண்டும் ஒருமுறை அவருக்கு என்னுடைய நன்றியையும் வரவேற்பையும் சொல்லி விடைபெறுகிறேன்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications