'கோவை என்கவுண்டர் 2010'.. சைலேந்திர பாபு செய்த தரமான சம்பவம்.. மாணவர்களுடன் நெருக்கமான நாட்கள்
கோவை: கோவை ஜவுளிக் கடை அதிபர் மகள் முஸ்கின், மகன் ரித்திக்கை கொலை செய்த காமகொடூரனான டிரைவர் மோகன்ராஜை, சைலேந்திர பாபு தலைமையிலான கோவை காவல் துறை டீம் தான் 2010ல் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியது. அப்போது இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.
Recommended Video
தமிழகத்தின் டிஜிபியாக பதவியேற்க உள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் அதிரடியான என்கவுண்ட்டர்களுக்கு பெயர் போனவர். வடசென்னையில் பல ரவுடிகளை ஒழித்தவர் என்றாலும் இவர் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த போது நடந்த சம்பவம் உலகையே உலுக்கியது.
கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். இவர் ஜவுளிக்கடை நிறுவனர் ஆவார். இவரது மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு முஸ்கின் ஜெயின் என்ற 11 வயது மகளும், ரித்திக் ஜெயின் என்ற 8 வயது மகனும் இருந்தனர். இருவரும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர்.

பாலியல் வன்கொடுமை
அவர்கள் தினமும் பள்ளிக்கு கால்டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி அவர்களை கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் கடத்தி சென்றான். அப்போது சிறுமி முஸ்கினை காமகொடூரானாக மாறி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான். அத்துடன் முஸ்கினின் தம்பி ரித்திக்கையும் கொலை செய்தான்.

ஜெயலலிதா பாராட்டு
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான நிலை இருந்து. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர். அப்போது கோவை சிட்டி கமிஷனராக சைலேந்திரபாபு இருந்தார். இந்த விவகாரம் பற்றி போலீஸுக்கு தகவல் வந்த உடன், மோகன்ராஜ்-யையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவனையும் போலீசார் பிடித்தனர். அதன் பிறகு நடந்த என்கவுன்டரில் மோகன்ராஜ் கொல்லப்பட்டான். இதை 2010ல் ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

சிறையில் மனோகரன்
மோகன்ராஜின் கூட்டாளி மனோகரனுக்கு தூக்குத்தண்டனையை வாங்கி கொடுத்துள்ளது காவல்துறை. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்துவிட்டு தற்போது மனோகரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் துரிதமாக ஆதாரங்களை சேகரித்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல செய்தது உள்ளிட்டவற்றில் கோவை மாநகர கமிஷ்னராக 2010ல் இருந்த சைலந்திர பாபுவின் பங்கு முக்கியமானது.

கோவை மக்கள் அன்பு
கோவையில் கமிஷனராக இருந்த 2010 கால கட்டம் தான் மாணவர்களுடன் சைலேந்திர பாபு இன்று வரை நெருக்கமாக இருக்க. காரணம், கோவை மக்கள் பண்போடும், அன்போடும் பழகியதை ஒருமுறை கூறிய சைலேந்திர பாபு. கோவை மக்கள் தங்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள் அங்கு, அடிக்கடி மாணவர்கள் பலர் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள் அதுதான் மாணவர்களுடனான நெருக்கமான பயணத்துக்குத் தொடக்கம் என்று என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications