பழகுவதற்கு இனியவர் ஆளுநர் ரவி! தனிப்பட்ட முறையில் ஆளுநருடன் மோதல் இல்லை! சட்டசபையில் முதல்வர் பேச்சு
சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவி பழகுவதற்கு இனியவர் என்றும், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை முடக்கி வைத்திருப்பதால் தான் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்ததாகவும் , அவருடன் தனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் , மீண்டும் சட்டசபையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நீட் விலக்கு மசோதா
அந்த மசோதாவினையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் ரவி அனுப்பி வைக்கவில்லை. மேலும் பல மசோதாக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உரசல் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதேபோல கட்சி ரீதியாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் மனிதநேய மக்கள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

ஆளுநர் தேநீர் விருந்து
ஆளுநர் விருந்தில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பழகுவதற்கு இனியவர் என்றும் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை முடக்கி வைத்திருப்பதால் தான் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்ததாகவும் , அவருடன் தனக்கு எந்த தனிப்பட்ட விரோதம் இல்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், " நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு மசோதா 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி முடங்கிக் கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகையில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தும்.

புறக்கணித்ததற்கு விளக்கம்
சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாக அமையும் என்பதாலும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலாத நிலை அரசுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஆளுநருக்கு நானே ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். மாண்புமிகு ஆளுநருடன் எங்களுக்கு எந்த விதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சராக எனக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும் போது இந்த ஆட்சியில் செயல்பாடுகளை மிகவும் பாராட்டி அவர் பேசியிருக்கிறார்.

ஆளுநருக்கு மரியாதை
நாங்கள் ஆட்சி நடத்தும் விதம் குறித்து பொது மேடையிலேயே ஆளுநர் பாராட்டிப் பேசியிருக்கிறார். அது ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர் எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை நாங்களும் தருகிறோம் அழித்துக் கொண்டிருக்கிறோம் தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் நிலையை கடந்த பண்பாடு. இந்த பண்பாட்டை நாம் எப்போதும் காக்கவேண்டும் காப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டுகளை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகளும் பலன்களுமே முக்கியம்.

வலிகள் அவமானங்கள்
அதையே முக்கியமானதாக நான் கருதுகிறேன் இந்த தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் மாண்பை தமிழ்நாடு மக்களின் உரிமையை நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. மசோதாவை அனுப்பி வைக்காமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். கடந்த 50 ஆண்டு கால எனது பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன் எனக்கு ஒரு பொருட்டல்ல. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது வலிகளையும் அவமானங்களையும் புகழ்ச்சிகளையும் புகழுரை என்று ஒதுக்கி விட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே என செயல்படுவது, அப்படித்தான் நான் செயல்பட்டு வருகிறேன்." என பேசினார்.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்











Click it and Unblock the Notifications