இந்தியா கூட்டணிக்கு எதிரான சர்வே.. திடீரென கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்! என்னாச்சு
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளன. லோக்சபா தேர்தல் தொடர்பாக வெளியாகும் எக்சிட் போல்களுக்கு இடையே முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இன்று வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகள் எல்லாம் இந்தியா கூட்டணி தோல்வி அடையும் என்றே கூறி உள்ளன. உதாரணமாக நியூஸ் 18 எக்ஸிட் போல் : தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் என்று CNN நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது. பாஜக+ 1-3 சீட்களிலும், அதிமுக+ கூட்டணி 0-2 சீட்களிலும் வெல்லும்-நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி-பி மார்க் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 154 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 30 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா செய்திகள்- டி-டைனமிக்ஸ் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 371 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 125 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 47 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது
ஸ்டாலின் கடிதம்: இப்படி லோக்சபா தேர்தல் தொடர்பாக வெளியாகும் எக்சிட் போல்களுக்கு இடையே முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஜூன் 4 - ஆற்ற வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட செய்தியில், முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதில்,
> வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும்.
> தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். 1. ETPBS, 2. சாதாரண தபால் வாக்கு.
> அதற்குரிய வழிமுறைகள் உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
> எப்படி EVM வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
> வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகளில் மட்டும்தான் துவங்க வேண்டும். முதல் அரை மணி நேரம் கழித்துத்தான் EVM வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.
> தபால் வாக்குகள் எண்ணிக்கையை என்ன காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் துரிதமாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.
> EVM இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அந்த EVM இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
>இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை படிவம் 17C-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
> 17C படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் EVM இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை EVM இயந்திரத்தில் பார்த்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
> இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
>வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக RO Table-க்கு செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.
> வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து VVPAT இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, EVM இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
> படிவம் 17C-இல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-இல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
> படிவம் 20-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
> பிறகு, படிவம் 20-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் .












Click it and Unblock the Notifications