3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. புதுக்கோட்டைக்கு புதிய எஸ்பி.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
Kallakurichi விவகாரத்தால் உளவுத்துறை ஐஜி மாற்றமா? *TamilNadu
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள்3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுகோட்டை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஐஜியாக இருந்த பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி/ இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் சென்னை அமலாக்கத்துறை ஐஜி துரைகுமார், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புப் புலனாய்வுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதுக்கோட்டை எஸ்பியாக இருந்த நிஷா பார்த்திபன் அயல்பணியில் மத்திய உளவுப்பிரிவுக்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamil Nadu government has ordered the transfer of 3 IPS officersThe Tamil Nadu government has ordered the transfer of 3 IPS officers in Tamil Nadu. Vandita Pandey, who was on the waiting list, has been appointed as Pudukottai SP. Similarly, Bhavaneshwari, who was the IG of Anti-Corruption Department, has been transferred as IG/Joint Director, Anti-Corruption Department.