ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டா?.. AI பயன்படுத்தப்படுகிறதே.. தமிழக அரசு ஸ்டிராங் வாதம்
சென்னை: பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது தமிழக அரசு தன் வாதத்தில் கூறியிருப்பதாவது: பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். ஆன்லைன் விளையாட்டுகளை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
ஆன்லைன் ரம்மியில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் அறிவுத் திறன் சரிபார்க்கப்படுவது எப்படி என்பதை அந்த நிறுவனங்கள் விளக்கவில்லை. ஆன்லைன் ரம்மியில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. ஆன்லைன் விளையாட்டில் பரிசு பெறுவோருக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது என தமிழக அரசு வாதம் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது தலைமை நீதிபதி அமர்வு.












Click it and Unblock the Notifications