Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மகேஷ்குமார் அகர்வால் உள்பட யார் யாருக்கு என்ன பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக ஆர். தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேய முக்கிய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.

அதன்படி டிஜிபி பிரதீப் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஏடிஜிபி ஜெயந்த் முரளியும் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்தார். தற்போது அவர் சென்னை ஆயுதப்படையின் கூடுதல் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபேஷ்குமார்

அபேஷ்குமார்

சென்னை மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த அபேஷ்குமார், சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர் தினகரன்

ஆர் தினகரன்


கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ஜெயராம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர். தினகரன், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன் ஐபிஎஸ் சென்னை ஆயுதப்படையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ப மூர்த்தி

ப மூர்த்தி

சென்னையில் உளவுத்துறை டிஐஜியாக இருந்த ராஜேந்திரன் தற்போது சென்னையில் தொழில்நுட்ப பிரிவின் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ப. மூர்த்தி, இப்போது சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பி அருளரசு

எஸ்பி அருளரசு

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி எஸ். செந்தில், தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. அருளரசு, சென்னையில் டிஜிபி அலுலவகத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.பி. பி. சரவணன்,

எஸ்.பி. பி. சரவணன்,

மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.எஸ். மகேஸ்வரன் மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எஸ்.பி. பி. சரவணன், சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் உதவி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ்குமார்

சுரேஷ்குமார்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சி.ராஜா, தற்போது வணிக குற்றங்கள் தொடர்பான சிஐடி பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எஸ்.பி. டிபி சுரேஷ்குமார், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+