தெரிந்தது பிறை.. நாளை முதல் தொடங்குகிறது புனித ரமலான் நோன்பு.. தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு
சென்னை : பிறை தெரிந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும்.
இதையடுத்து 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

ரம்ஜான் நோன்பு
அந்த வகையில், வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது . இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு பண்டிகை நாளை முதல் கடைபிடிக்கப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

பிறை தெரிந்தது
இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. இன்று மாலை பிறை தென்பட்டதாக தலைமை காஜி அறிவித்திருந்தார்.

நாளை முதல் நோன்பு
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இதனையடுத்து அதிகாலை தொடங்கும் நோன்பு கடைபிடிக்கும் மக்கள் மாலை தொழுகைக்கு பிறகு நோன்பை முடித்துக் கொள்வர். குறிப்பாக தராவீஹ் எனும் இரவு நேர சிறப்பு தொலுகை நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்படும்.

சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகள் சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் , இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் அலங்கரிப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications