தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2026 LIVE : ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை- அமைச்சர் ரகுபதி விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதுதான் சட்டசபை மரபு, சட்டசபையிலேயே பிரச்சினை செய்ய ஆளுநர் முயன்றார், ஆளுநரின் மைக்கை யாரும் ஆஃப் செய்யப்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு
சபை மரபு, சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் பேசுகிறோம்- அப்பாவு
அரசின் குறைகளைச் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை- அப்பாவு
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டுப் பேசலாம்- அப்பாவு
ஆளுநர் என்பவர் அரசியலமைப்பின் பிரதிநிதி, சபையின் மாண்பை அவர் மதிக்க வேண்டும்- அப்பாவு
சபை மரபு, சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் பேசுகிறோம்- அப்பாவு
அரசின் குறைகளைச் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை- அப்பாவு
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டுப் பேசலாம்- அப்பாவு
ஆளுநர் என்பவர் அரசியலமைப்பின் பிரதிநிதி, சபையின் மாண்பை அவர் மதிக்க வேண்டும்- அப்பாவு
ஆளுநர் மைக் அணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கும் சபாநாயகர் அப்பாவு விளக்கம்
ஆளுநர் தனது பணியைத் தாண்டி, அவையில் பேசுவது மரபு இல்லை- சபாநாயகர் அப்பாவு
அப்படித் தாண்டி பேசும்போது தான் தலையிட வேண்டி இருக்கிறது- சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் என்ற முறையில் நான் பேசும்போது, மற்ற மைக்குகள் நிறுத்தப்படும் - சபாநாயகர் அப்பாவு
அப்படி தான் ஆளுநர் மைக் நிறுத்தப்பட்டு இருக்கலாம்- சபாநாயகர் அப்பாவு
ஆளுநர் தனது பணியைத் தாண்டி, அவையில் பேசுவது மரபு இல்லை- சபாநாயகர் அப்பாவு
அப்படித் தாண்டி பேசும்போது தான் தலையிட வேண்டி இருக்கிறது- சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் என்ற முறையில் நான் பேசும்போது, மற்ற மைக்குகள் நிறுத்தப்படும் - சபாநாயகர் அப்பாவு
அப்படி தான் ஆளுநர் மைக் நிறுத்தப்பட்டு இருக்கலாம்- சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும்- அப்பாவு
22, 23- ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும்
வரும் 24 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு
சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாளைய கூட்டம் ஒத்தி வைப்பு
22, 23- ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும்
வரும் 24 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு
சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாளைய கூட்டம் ஒத்தி வைப்பு
ஆளுநர் வெளியேறிய நிலையில், அவரது உரையை அப்பாவு வாசித்து வருகிறார். தொழிலாளர் நலத்துறை சார்பில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் வழங்க வேண்டிய 3,112 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஆளுநர் மீது தவறான எண்ணத்தை திமுக உருவாக்குகிறது. ஆளுநர் தவறை சுட்டிக் காட்டியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஆளுநர் மீது தவறான எண்ணத்தை திமுக உருவாக்குகிறது. ஆளுநர் தவறை சுட்டிக் காட்டியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து வருகிறார். 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளாகவும், திறமை வாய்ந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் இருந்தன. ரூ. 12 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாக என்று கூறுவது தவறானது. முதலீடுகளை ஈர்ப்பதில் 4 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது 6 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் காகிதங்கள் நிலையிலேயே உள்ளன. பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு, பாலியல் சம்பவங்கள் 33 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போல இப்போது மீண்டும் நடந்து கொண்டுள்ளார். அரசமைப்பை ஆளுநர் மீறியுள்ளார். உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதை சட்டப்பேரவை ஏற்கவில்லை. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
READ MORE












Click it and Unblock the Notifications