சுயசார்பைதான் பாரதி பேசியுள்ளார்.. இந்தியா அதைதான் செய்து வருகிறது.. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்
சென்னை: நாடு முழுவதும் பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாரதியின் கவிதைகளை திரட்டி பார்த்தால் அதில் சுயசார்பு இந்தியாவைதான் பாரதி பேசியுள்ளார். அதுதான் தற்போது நடந்து வருகிறது என இந்த நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
இந்தியாவில் சுதேசி உணர்வை உச்சநிலைக்கு கொண்டு சென்றதில் பாரதியாருக்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது கவனிக்கதக்கதாக உள்ளது.

சுதேசி உணர்வு
பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்பு மறைமுகமாகவும், நேரடியாகவும் என நீடித்து. அதில் குறிப்பிடத்தக்கது சுயசார்ப்பு கொள்கை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடக்கூடியவர்களை காவல்துறையினர் தொடர்ந்து வேட்டையாடி வந்த நிலையில் இந்த எதிர்ப்பு பல்வேறு முறைகளில் வெளிப்பட தொடங்கியது. குறிப்பாக 1907ல் காங்கிரஸ் கட்சியின் சூரத் மாநாட்டிற்கு பிறகு இது வலுவடைய தொடங்கியது.

பாரதியின் பங்கு
ஏனெனில் இதற்கு பின்னர்தான் தமிழ்நாட்டில் வ.உ.சி கப்பல் போக்குவரத்தை ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தொடங்கினார். இந்த போக்குவரத்தை தொடங்கியதில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பாரதிக்கு இந்த அதீத விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணமாக 1906ல் நடந்த வங்கப்பிரிவினைதான் என சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் சென்னை ஜன சங்கம் என்பதை தோற்றுவித்தார். சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு ஆகியவை இதன் முக்கிய குறிகோள்களாக கருதப்பட்டன.

மரியாதை
இப்பேர்ப்பட்ட விடுதலை போராட்ட வீரராக இருந்த பாரதியின் 101வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியின் சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், "பாரதியின் கவிதைகளை திரட்டி பார்த்தால் அதில் சுயசார்பு இந்தியாவைதான் பாரதி பேசியுள்ளார். அதுதான் தற்போது சாத்தியமாகி வருகிறது" என்று கூறினார்.

சுயசார்பு
மேலும், "சுயசார்பின் ஒரு பகுதிதான் தடுப்பூசி உற்பத்தியும். தடுப்பூசி நாம் உற்பத்தி செய்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்." என்று கூறினார். மேலும் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தற்கொலை தீர்வு கிடையாது. நீட்டை பொறுத்த வரை வேறு வழி உள்ளது, வாய்ப்புகள் உள்ளது. கல்வித்தரத்தை உயர்த்தி பொது தேர்வை எழுத மேம்படுத்த வேண்டும், இந்திய அளவில் பல தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கேற்றவாறு தமிழகம் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications