கட்டுக்கடங்காத கொரோனா... 20,000ஐ கடந்த ஆக்டிவ் கேஸ்கள்... உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 20,204ஆக உயர்ந்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
அதேபோல இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,446 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 82,078 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 17 பேர் உட்பட 3,446 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 8,96,226ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு
ஒரே நாளில் சிகிச்சை பலனிற்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு 12,764ஆக அதிகரித்துள்ளது. கடந்த 14 மணி நேரத்தில் 1,834 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,63,258ஆக உயர்ந்துள்ளது.

Array
மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 20,204 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் மாநிலத்தில் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,

சென்னையில் அதிகம்
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1290ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 730 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்து கோவையில் அதிகபட்சமாக 292 பேருக்கும் செங்கல்பட்டில் 285 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 201 பேருக்கும் திருச்சியில் 142 பேருக்கும் தஞ்சையில் 138 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications