கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் வீணாக்கியதில் முதலிடத்தில் தமிழகம்!
சென்னை: நாட்டில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் வீணாக்கிய மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இந்தியாவில்தான் மிக மோசமாக உள்ளது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

தமிழகம் 4-வது இடம்
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசு விளக்கம்
அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசிகள், படுக்கைகள், மருந்துகள் எதிலும் பற்றாக்குறையே இல்லை என்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிகம் வீணானது
அதாவது கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் வீணாக்கியதில் தமிழகம்தான் முதலிடமாம். இதுவரை 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதில் 44 லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளனவாம். இந்த அடிப்படையில் தமிழகம்தான் 12.10% அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி உள்ளதாம். ஹரியானா 9.74%; பஞ்சாப் 8.12%; மணிப்பூர் 7.8% ; தெலுங்கானா 7.55% அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி இருக்கின்றன.

தடுப்பூசிகளை வீணாக்காத மாநிலங்கள்
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்காத மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் டையூ, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகளில் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications