மருமகள் மீதும் பாய்ந்த ஆக்சன்.. தெலுங்கானா வரை நீளும் ரெய்டு.. கே.பி அன்பழகனுக்கு வைக்கப்படும் செக்
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வரும் விஜிலன்ஸ் ரெய்டில் அவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.87 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம், சென்னை மட்டுமின்றி தெலுங்கானாவில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.
இன்று காலையில் இருந்து முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கும் 6வது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் தொடர்புடைய இடங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இவரின் வங்கி லாக்கரில் சோதனை செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

முடியவில்லை
மொத்தம் 58 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரெய்டு முடிந்துவிட்டது. மற்ற இடங்களில் இந்த ரெய்டு இன்னும் முழுமையாக முடியவில்லை. ரெய்டில் கே.பி அன்பழகன் அவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.87 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6.6 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த ஆவணங்களை மீறி பல இடங்களில் அவர் சொத்துக்களை சேர்த்து இருக்கிறார்.

கேபி அன்பழகன்
பல இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி அவர் சொத்து சேர்த்து இருக்கிறார். இதை அடிப்படையாக வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள், சொத்துக்கள் அவரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும் என்று கூறி தற்போது பறிமுதல் செய்த சொத்துக்களை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை
இவர் வங்கிகளில் முறைகேடாக பணம் சேர்த்ததும் இந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வங்கி ஆவணங்களும் இந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில அசையா சொத்துக்களையும் வருமானத்திற்கு அதிகமாக இவர் வாங்கி இருக்கிறார். கே.பி அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக வாங்கிய அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சொத்து
தற்போது இவரின் வங்கி பெட்டகங்கள் திறந்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் இருந்தும் கூடுதல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இவர் மீதும் , இவரின் குடும்பத்தினர், உறவினர் மீதும் சொத்துகுவிப்பு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. 2016 -2021 காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், உறவினர் பெயரிலும் சொத்து சேர்த்துள்ளார்.

மருமகள்
இதனால் இவரின் மனைவி, மகன், மருமகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் தனது மருமகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த சொத்து குவிப்பு வழக்கு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் நாட்களில் கே.பி அன்பழகனுக்கு சம்மன் அனுப்பி அவர் மீது விசாரணை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட அதிக சொத்து இந்த ரெய்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications