திமுக, அதிமுகவை தோற்கடித்த சுயேச்சை.. வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலரானார் பா.ரஞ்சித் அண்ணன் பிரபு
சென்னை: வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலராக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் அண்ணன் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.
வில்லிவாக்கம் ஒன்றியம் 1வது வார்டு கார்லபாக்கம், பாலவேடு,வேளச்சேரி,ஆலத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 10654 வாக்குகள் உள்ளன. இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரபு 3846 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி 3591 வாக்குகளும் பெற்றனர்.
அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தி 2555 பெற்றார். சுயேச்சை பிரபு, திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் அண்ணன் ஆகும். பிரபு 255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட 5 நகரங்களில் டிஆர்டிஓ ஆய்வகம் துவக்கம்.. 35 வயதுக்கு கீழுள்ளவர்கள் மட்டுமே விஞ்ஞானிகள்
ரஞ்சித் சமீபகாலங்களாக திரைத்துறையை தாண்டி, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில்தான், பிரபு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.