அரசு டாஸ்மாக்கில் அதிரடி.. மதுக்கடைகள் மட்டுமல்ல, இறைச்சி கடைகளுக்கும் இந்த நாளில் லீவு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதன்படி, மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கான உத்தரவை மாநகராட்சிகள் பிறப்பித்துள்ளன.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய்தான், தமிழக அரசுக்கு பெருமளவில் கிடைத்து வருகிறது. அதாவது, மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மதுக்கடைகளிலிருந்து கிடைத்து வருவதாக சொல்கிறார்கள்.

மதுக்கடைகள் செயல்பாடு
தற்போது தமிழகத்தில் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்து கொண்டிருக்கிறது.. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு வருவாய் என்றால், விடுமுறை நாட்களில் இந்த வருவாய் இரண்டு அல்லது மூன்று மடங்காக பெருகிவிடுகிறது.
எனினும், ஒருசில முக்கியமான நாட்களில் மதுக்கடைக்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.
மகாவீரர் ஜெயந்தி தினம்
இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இநநிலையில், தமிழ்நாட்டில் பகவான் மகாவீரர் ஜெயந்தி தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமாகும். இதுகுறித்த அறிவிப்பினை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பார்கள்.. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியையொட்டி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக்கூடங்களையும் மூட பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
சென்னை கலெக்டர் அறிவிப்பு
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications