ஜன்னல் ஓர பயணிகளுக்கு “குறி”.. கால் போச்சே! செல்போன் திருட ரயிலில் “ஜம்ப்”.. மருத்துவமனையில் திருடன்
சென்னை: ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணிகளின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறிக்க முயன்ற திருடன் கீழே விழுந்ததில் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சென்டரல் டாக்டர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய மின்சார இரயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ரயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகள், உறங்கிக்கொண்டு செல்லும் பயணிகளை குறிவைத்து நிறைய திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ரயிலில் தொடரும் திருட்டு
இவ்வாறு திருடுபவர்கள் ரயிலில் பயணித்தபடியோ அல்லது, ரயில் தண்டவாளம் ஓரம் நின்றபடியோ திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க ரயில்வே காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

திருட்டு முயற்சி
இந்த நிலையில்தான் இந்த வழித்தடத்தில் செல்போன் பறிக்க ரயிலில் ஏறிய திருடன் தவறி கீழே விழுந்து அவரது கால் எலும்பு முறிந்து இருக்கிறது. படுகாயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி வரை செல்லும் ரயில் இந்த திருட்டு முயற்சி நடந்துள்ளது.

திருடன் கால் முறிந்தது
சென்னை கொருக்குப்பேட்டையை நெருங்கிய இந்த ரயில் கேட் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் பொறுமையாக வரும்போது, நவீன் எனப்படும் அட்டை நவீன் அதில் ஏற முயற்சித்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கால் முறிந்து துண்டானது. ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருப்பவர்களிடம் செல்போன் பறித்து செல்வது நவீனின் வழக்கம் என்று கூறப்படுகிறது.

பல வழக்குகள்
செல்போன் திருட்டு போன்ற பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு இருக்கும் நவீன் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை இருப்புபாதை காவல்நிலையத்தில் ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications