வைகோவுக்கு தண்டனை.. தர்மசங்கடத்தில் திமுக.. விரக்தியில் மதிமுக!
வைகோ கருத்து குறித்து வாய் திறக்க முடியாத சூழலில் திமுக உள்ளதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: இன்று காலையில் இருந்து வைகோ விஷயத்தில் என்ன சொல்றதுன்னே தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறது திமுக தரப்பு!
2009-ல் பதியப்பட்ட வழக்குக்குதான் 10 வருஷம் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 10 வருஷமாக இந்த கேஸ் எந்த நிலைமையில் இருந்தது என்று தெரியாத நிலையில், திடுதிப்பென்று இன்று தீர்ப்பு வழங்கிய பின்னணியோ, காரண காரியமோ நாம் ஆராய தேவையில்லை.
அதே சமயம், இந்த வழக்கை தொடுத்தது திமுகதான். அதுவும் மறைந்த கருணாநிதிதான். அன்று வைகோவுடன் திமுகவுக்கு இருந்த உறவுமுறையே வேறாக இருந்தது.

ஸ்டாலின்
வைகோவின் அசுர வளர்ச்சி, மகன் மீதான கருணாநிதி பாசம் போன்ற காரணங்கள் வரிசைகட்டி நிற்க, கட்சியை விட்டு வெளியேறிய வைகோவை திமுக விரும்பவில்லை. அதே சமயம், ஸ்டாலினை முதல்வராக்க விடவே மாட்டேன் என்று கங்கணம் கட்டி கொண்டு பேசினார் அன்றைய வைகோ.

ராஜ்ய சபா சீட்
ஆனால் இது எல்லாமே காலத்தின் சூழல், திரும்பவும் திமுகவுடன் வைகோ கரம் கோர்க்கும் நிலை ஏற்பட்டது. ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று முழக்கமிட்டார் வைகோ. 27 வருஷத்துக்கு முன்னால் யாரால், எந்த கட்சியை விட்டு வெளியேறினாரோ, இன்று அதே கட்சியில் சம்பந்தப்பட்டவராலேயே ராஜ்ய சபா சீட் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கூட்டணி
கால இடைவெளிகளில் நடந்த விஷயம், இப்போது திமுக, மதிமுக தரப்பினருக்கும் நிறைய தர்மசங்கடங்களை தந்துள்ளது. 10 வருஷம் கழிச்சு திரும்பவும் கூட்டணிக்குள் இணைவோம் என்று இரு கட்சிகளுமே நினைத்து கூட பார்த்திருக்காது.

சீமான்
இப்போது இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளதை திமுக எப்படி எடுத்து கொள்ளும் என்றே தெரியவில்லை. சம்பந்தமே இல்லாத சீமான், வைகோ கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஓங்கி குரல் கொடுத்துள்ளார். ஆனால் கூட்டணியில் உள்ள கட்சியான திமுகவோ என்ன சொல்வது, என தெரியாமல் உள்ளது. ஆதரிக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. இது கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல், இரு கட்சி தொண்டர்களிடமும் இப்படிப்பட்ட இறுக்கமான சூழலே நிலவி வருவதை என்னவென்று சொல்வது?
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications