சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் : திருமாவளவன்
சென்னை : சேகுவேரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து இருப்பார், சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார், ஈழ விடுதலையை ஆதரித்துக் குரல் கொடுத்திருப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா சென்னை வந்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சேகுவேரா இன்று இருந்திருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் எனப் பேசியுள்ளார்.

சேகுவேரா மகள், பேத்தி
கியூபாவைச் சேர்ந்த புரட்சியாளர் மறைந்த சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அலெய்டா குவேரோ தனது மகள் எஸ்டெஃபானியுடன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை வந்த அலெய்டா குவேராவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இன்று சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக க்யூபா ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது.

திருமாவளவன் பேச்சு
இந்தக் கூட்டத்தில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசுகையில், "எண்ணமெல்லாம் புரட்சி என்று சிந்திக்கும் வரம்பு கடந்த சிந்தனையாளர்தான் சேகுவேரா. இனம், மதம், மொழி கடந்து இளம் தலைமுறையினர், புரட்சிகர சக்திகளால், இடதுசாரி அமைப்புகளால் நேசிக்கப்படுபவர் அவர். அவர் மகள் இங்கு வந்திருப்பது அவரே வந்தது போல உள்ளது. என் நாட்டுக்கு மட்டும் போராடுவேன் என்று சேகுவேரா நினைத்து இருந்தால் இங்கு அவரைப் பற்றி பேசி கொண்டு இருக்க மாட்டோம்.

வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்திருப்பார்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர், சராசரி மருத்துவனாக என் வாழ்வை முடித்துக் கொள்ள மாட்டேன் என்று சிந்தித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கியூபா மக்களுக்கு என்றும் துணை நிற்கும். சேகுவேரா இன்று இருந்திருந்தால் ஈழ விடுதலையை ஆதரித்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு
சேகுவேராவின் மகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். சேவின் அதே சிந்தனையை உள்வாங்கி புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் செயல்பட்டு வருகிறார் அலெய்டா. ஆதிக்கம் ஒடுக்குமுறை எங்கு இருந்தாலும் ஏகாதிபத்தியம் தான். ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையும் ஏகாதிபத்தியம் தான் அதனை எதிர்த்து போராடுவதும் ஏகாதிபத்திய புரட்சி தான்" எனப் பேசினார்.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications