13 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- ஜன.19-ல் ஆஜராக ரஜினிக்கு விசாரணை ஆணையம் 2-வது சம்மன்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஜன. 19-ல் ஆஜராக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
Recommended Video

2108-ம் ஆண்டு மே 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

தூத்துக்குடியில் ரஜினிகாந்த்
துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசு அதிகாரிகள், ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர், பத்திரிகையாளர்கள் என பல தரப்பு கருத்துகளை விசாரணை ஆணையம் கேட்டறிந்து வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடிக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.

சமூக விரோதிகள் ஊடுருவல்
அப்போது, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு சமூகவிரோதிகளின் ஊடுருவலே காரணம் என ரஜினிகாந்த் பேட்டி அளித்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி கடும் கண்டனத்துக்குள்ளானது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என ரஜினிகாந்த் விமர்சித்ததாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விசாரணை ஆணையமானது ரஜினிகாந்தையும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ரஜினிக்கு முதல் சம்மன்
இதனடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிகாந்துக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் அப்போது ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பின்னர் லாக்டவுன் காலம் அமலில் இருந்ததால் விசாரணை ஆணையமும் செயல்படாமல் இருந்தது.

ஜன.19-ல் ஆஜராக சம்மன்
தற்போது 23-வது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 19-ந் தேதியன்று தூத்துக்குடியில் விசாரணை ஆணையம் முன்பாக ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications