கேரளாவில் 27 அரசியல் படுகொலைகள்.. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்... பி.எப்.ஐ. இயக்கத்தின் பின்னணி என்ன?
சென்னை: மத்திய அரசால் சட்டவிரோத இயக்கமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
1990களுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலைகளால் உருவானது பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரை, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சூழ்நிலைகள் பிஎப்ஐ இயக்கம் உருவாக அடிப்படை காரணமாக இருந்தது.

பிஎப்ஐ அமைப்பு தொடர்பான சில தகவல்கள்:
1992: கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் சேவா சங்கம்) என்ற இயக்கத்தை முஸ்லிம்கள் உருவாக்கினர். பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்ததால் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.
1992: National Development Front (NDF)- தேசிய வளர்ச்சி முன்னணி என்ற இஸ்லாமிய அமைப்பு உருவானது
1993: தேசிய வளர்ச்சி முன்னணி உருவாக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
1997: கேரளாவில் பிரம்மாண்டமான மனித உரிமை மாநாடு நடத்தப்பட்டது
2007: பெங்களூருவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு உருவாக்கம் - என்.டி.எப், தமிழகத்தின் மனித நீதி பாசறை, கர்நாடகாவின் கேஎஃப்டி ஆகியவை இணைந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவை உருவாக்கின.
2009: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சியாக எஸ்.டி.பி.ஐ (SDPI) உதயமானது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ. என்ற மனித உரிமை இயக்கத்திலும் பி.எப்.ஐ. நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டனர். 2013, 2018 தேர்தல்களில் கர்நாடகாவிலும் 2016-ல் தமிழகத்திலும் எஸ்டிபிஐ போட்டியிட்டது.
2012: கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை நடத்தியது
பிஎப்ஐ
2014: கேரளா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பிஎப்ஐ, 27 அரசியல் படுகொலைகள்- 86 கொலை முயற்சிகள், 125 மத மோதல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தது
2019: நாடு முழுவதும் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் பிஎப்ஐ இருந்ததாக கூறப்பட்டது.
2019: தமிழகத்தில் மதமாற்றத்தை தடுத்ததால் பிஎப்ஐ அமைப்பினார் பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்
2019: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டது.
2020: ஆப்கானிஸ்தானில் குருத்வாரா மீதான தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி கேரளாவை சேர்ந்தவர், பிஎப்ஐ இயக்கத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகின.
2022 மே: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
2022 செப்டம்பர்: நாடு முழுவதும் பிஎப்ஐ இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி சோதனை; 300க்கும் மேற்பட்டோர் கைது
2022 செப்டம்பர் 28: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என அறிவித்து 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு. பாப்புலர் ஃபிரண்ட் இந்தியாவின் 8 முன்னணி அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications