வேகமெடுக்கும் ஓமிக்ரான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மருத்துவமனையில் திடீர் ஆய்வு!
சென்னை: இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் ஏற்கனவே காலடி எடுத்து வைத்து விட்டது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையம்
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 136 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

களத்தில் இறங்கிய ஸ்டாலின்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்
ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பி.எம் கேர்ஸ் நிதியில் அமைக்கப்ட்டுள்ள தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் என மருத்துவமனையின் பல இடங்களில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
Recommended Video

வார் ரூமிலும் ஆய்வு
இதேபோல் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்ட்டுள்ள கொரோனா தடுப்புக்கான வார் ரூமிலும் (கொரோனா தடுப்பு கட்டளை மையம்) முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ், ஓமிக்ரான் குறித்த சந்தேகம் எழுப்பும் பொதுமக்களுக்கு இங்கு முறையாக பதில் தரப்படுகிறதா? என்று வார் ரூமில் இருக்கும் பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications