அடிக்குது குளிரு.. 3 நாட்களுக்கு பனி கொட்டுமாம்.. மங்கி கேப், ஸ்வெட்டர் சகிதம் நடமாடுங்க மக்களே!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பனி பொழிவு நீடிக்கும் என கூறப்படுகிறது.
சென்னை: தமிழக மக்கள் மங்கி கேப், ஸ்வெட்டருடனே இருக்க வேண்டியதுதான். காரணம், இன்னும் 3 நாட்களுக்கு பனி கொட்டோ கொட்டென கொட்ட போகிறதாம்!
மழையை காணோமே என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தால், இப்படி யாருமே எதிர்பார்க்காத வகையில் குளிர் நம்மை வாட்டி வதைத்து வருகிறது.

அதிலும் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் வேலூர், சென்னை, மதுரை போன்ற மாவட்டங்களில் குளிரின் அளவு அதிகரித்தே உள்ளது. காலையிலும், மாலையிலும் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலைதான் நீடிக்கும் என வானிலை அய்வு மையம் நேற்று எச்சரித்தது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மூடு பனி நிலவும் என்று கூறியது.
ஆனால் கடலோர மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் பனியின் அளவு குறையும் என்ற ஆறுதல் தகவலையும் சொன்னது. குறிப்பாக என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் நீலகிரி, கொடைக்கானலை பற்றி சொல்லவே தேவையில்லை. ஊட்டியில் குளிரின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகம் நிலவி வருவதை வானிலை ஆய்வு மையமே சுட்டி காட்டியது. எப்படி இருந்தாலும் இன்னும் 3 நாட்களுக்கு தமிழக மக்கள் குளிரின் பிடியில் இருந்து தப்புவது கடினம்தான் என்பதால் மக்கள் கொஞ்சம் கவனமுடனே இருந்து கொள்வது அவசியம்!!
-
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications