பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் - அரசு தேர்வுகள் இயக்ககம்
12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை: 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
வழக்கமாக 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். நடப்பு கல்வியாண்டில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 28ம் தேதி வரை நடக்கும். சுமார் 8.36 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications