இதுதான் "மேக வெடிப்பு.." சென்னையில் கொட்டி தீர்த்த 123 மி.மீ. மழை.. வெதர்மேன் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா, எம்ஆர்சி நகர், ராயப்பேட்டை, மாம்பலம் பகுதிகளில் மழை தெறிக்க விடுவதாகவும் இது கிட்டதட்ட மேகவெடிப்பு போன்ற நிலைதான் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Chennai-யில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..காரணம் என்ன? | Oneindia Tamil

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதங்களில் தீவிரமடைந்தது. இந்த நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் நவம்பர் 7,11, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையை மக்களால் மறக்க முடியாது.

    அந்த அளவுக்கு அதிக மழை பெய்துவிட்டது. மார்கழி தொடங்கியவுடன் சில தினங்களாக மழையில்லாமல் இருந்தது. எனினும் தமிழகத்தில் சில இடங்களில் பெய்துதான் வந்தது.

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை

    இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், மெரினா, மந்தைவெளி, ராயப்பேட்டை, முகப்பேர், அண்ணாநகர், கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது.

    அதிகபட்சம்

    அதிகபட்சம்

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் இன்று சென்னையில் பெய்து வரும் மழையை மேக வெடிப்பு என்று சொல்லலாம். இதுவரை அதிகபட்சமாக 124.7 மி.மீ. மழை பெய்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 96.5.மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காற்றின் வேகம் இன்று நண்பகல் 12.17 மணிக்கு 30.6 கி.மீட்டராக இருந்தது.

    கிழக்கு பகுதியில் மேகக் கூட்டங்கள்

    கிழக்கு பகுதியில் மேகக் கூட்டங்கள்

    சும்மா தெறிக்க விடுகிறது. கிழக்கு பகுதியில் கடலில் நிறைய மேக கூட்டங்கள் உள்ளன. இந்த மழை இன்னும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்காவது நீடிக்கும். எம்ஆர்சி நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வேற லெவலில் மழை பெய்கிறது.

    100 மி.மீ. தாண்டும்

    100 மி.மீ. தாண்டும்

    சமீபத்திய ஆண்டுகளில் சென்னையில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்ததில்லை.பெரும்பாலான இடங்களில் மழையின் அளவு 100 மி.மீட்டரை தாண்டும். கடல் பகுதிக்கு அருகே காற்று குவிந்துள்ளது. எம்ஆர்சி நகரில் 123 மி.மீ. மழை பெய்துள்ளது. பெய்கிறது , பெய்கிறது தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது, எம்ஆர்சி நகரில் மழையின் அளவு 150 மி.மீ. அளவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மெரினாவில் 150 மி.மீ.ருக்கு மேல் மழையின் அளவு இருக்க வாய்ப்புள்ளது. நுங்கம்பாக்கத்தில் 115 மி.மீ மழை பெய்துள்ளது. மாம்பலத்திலும் 100 மி.மீ மழை பெய்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+