Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பதவிக்கு 296 பேர் போட்டி! திணறிய டிஎன்பிஎஸ்சி! இந்த வருடம் இத்தனை பேர் போட்டியா? முழு விபரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், ஒரு பதவிக்கு 296 பேர் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை வெளியிட்டது. இதையடுத்து பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

274 கிராம நிர்வாக அலுவலர்கள், 3681 இளநிலை உதவியாளர்கள், 2108 தட்டச்சர்கள், 1024 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 138 பணியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இதேபோல், வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இளநிலை உதவியாளர், பில் வசூலிப்பவர் சுருக்கெழுத்து தட்டச்சர் என 163 பணியிடங்களோடு சேர்த்து மொத்தம் 7301 பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வு

இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது. சுமார் 30 நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலஅவகாசம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இதில் லட்சக்கணக்கோர் விண்ணப்பித்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவியில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்தது இல்லை. ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு அதிகபட்சமாக 20.76 லட்சம் பேர் தான் விண்ணப்பித்திருந்தனர்.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளுக்கு முந்தைய 4 நாட்களில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இறுதி நாளன்றும் நேற்று முன்தினம் விண்ணப்பிக்க அதிகமானோர் ஆர்வம் காட்டினர். இதனால் நேற்று முன்தினம் 12 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதால் இரவிலும் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.

காலகெடு முடிந்துள்ளது

காலகெடு முடிந்துள்ளது

தற்போது விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டிருந்த காலகெடு முடிந்துள்ளது. இத்தேர்வுக்கு 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 9,26,583 பேர், பெண்கள் 12,58,616 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 129 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதைத்தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும். இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும்.

அபார சாதனை

அபார சாதனை

டிஎன்பிஎஸ்சிக்கு தேர்வுக்கு இதுவரை கடந்த 2012ம் ஆண்டு 12,33,731 பேர், 2013ம் ஆண்டு 14,05,137 பேர், 2014ம் ஆண்டு 12,72,862 பேர், 2016ம் ஆண்டு 15,79,747 பேர், 2017ம் ஆண்டு 20,76,200 பேர், 2019ம் ஆண்டு 16,31,648 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிக பட்சமாக 2017ம் ஆண்டு 20,76,200 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்தாண்டு அதையும் விட அதிகபட்சமாக 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+