மே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு
சென்னை: மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். லாக்டவுன் வரும் 31ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
Recommended Video
மார்ச் 25ம் தேதி தொடங்கிய நாடு தழுவி லாக்டவுன் 4முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31ம் தேதியுடன் லாக்டவுன் முடிய உள்ளது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்பட சில மாவட்டங்களில கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு ஊரடங்கு தளர்வு காரணமாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதை தவிர வேறு வழியில்லை என்பதால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது 5ம் கட்டமாக லாக்டவுனை தமிழகத்தில் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்.
இந்த குழுவிடம் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம், கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. இந்த குழுவுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வரிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக் குழு செய்தியாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு ஒரேடியாக லாக்டவுனை தளர்த்த கூடாது என்றும் படிப்படியாகவே தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications