நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்.. ஆனால் சில கண்டிஷன்.. தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நாளை ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகத்தில் நாளை ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறை வெளியிடப்பட்டு உள்ளது.
Recommended Video
அன்லாக் 1.0 நாளை முதல் நாடு முழுக்க அமலுக்கு வருகிறது. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் நாளை முதல் முக்கியமான தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் நாளை கோவில்கள், மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது. இந்த தளர்வுகள் மொத்தம் மூன்று கட்டமாக நாடு முழுக்க அமலுக்கு வரும்.

நாளை திறப்பு
ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக ஹோட்டல்களில் நாளையில் இருந்து பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி ஹோட்டல்களில் கண்டிப்பாக தெர்மல் ஸ்கெனிங் கருவிகள் இருக்க வேண்டும். வாசலில் எல்லா வாடிக்கையாளர்களையும் தெர்மல் சோதனை செய்துதான் உள்ளே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் கொரோனா அறிகுறி உள்ள நபர்களை உள்ளே அனுப்ப கூடாது.

உடல் வெப்பநிலை
அதிக உடல் வெப்பநிலை இருந்தாலும் கடைக்கு உள்ளே அனுப்ப கூடாது.ஹோட்டலின் நுழைவாயிலில் கிருமி நாசினி இருக்க வேண்டும். கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். கைகழுவும் இடத்திலும் கண்டிப்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும். டேபிள்களை சுத்தமாக துடைத்து வைத்து இருக்க வேண்டும். கடைகளை திறக்கும் முன் முழுமையாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.

ஏசிக்கு தடை
ஏசி மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது. இதனால் ஏசி ரூம்களை இயக்க கூடாது. ஹோட்டல்களில் மின்விசிறிகள் இயங்கலாம். ஆனால் ஏசிகள் இயங்க கூடாது. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. டேபிள் அருகருகே இருக்க கூடாது. குறைந்தது டேபிளுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். தினமும் கழிவறைகளை 5 முறை சுத்தமாக கழுவ வேண்டும்.

ஊழியர்கள் மாஸ்க்
ஊழியர்கள் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை செய்ய வேண்டும். செயின், கடிகாரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஊழியர்கள் அணிய கூடாது. உணவுகளை சமைக்கும் போது சரியாக தரக்கட்டுப்பாட்டை பயன்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது. பழைய உணவு பொருட்களை விற்க கூடாது , என்று கூறப்பட்டு உள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications