19 வருட காத்திருப்பு.. உயிருக்கு போராடும் குழந்தை.. ரூ.3 லட்சம் திரட்ட முடியாமல் தவிக்கும் பெற்றோர்
கிருஷ்ணகிரி: நீண்ட 19 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து, இரண்டு முறை கருச்சிதைவின் வலியை அனுபவித்த ஒரு ஏழை தம்பதியருக்கு, இறுதியாகப் பிறந்த பெண் குழந்தை இப்போது மரணப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்குத் தேவையான 3 லட்சம் ரூபாயைத் திரட்ட முடியாமல், அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நல்நெஞ்சங்களை நோக்கி உதவிக்கரங்களை நீட்டியுள்ளது.

மகிழ்ச்சியைக் கலைத்த இதய நோய்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்சர் மற்றும் ஃபரிதா தம்பதியினருக்கு, பல ஆண்டுகாலப் பிரார்த்தனைக்குப் பிறகு அண்மையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. குழந்தை பிறந்து ஐந்தே நாட்களில், அவளுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாகப் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளது இதயத்தில் தீவிரக் குறைபாடுகள் இருப்பதை உறுதி செய்தனர்.
வழிகாட்டுதல் இல்லாமல் தவித்த அந்தப் பெற்றோரை, ஒரு கிராமப்புற சுகாதார செவிலியர் (VHN) கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மியாட் (MIOT) மருத்துவமனை நடத்திய இலவச இதய பரிசோதனை முகாமிற்கு அனுப்பி வைத்தார். அங்கு நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையில், குழந்தைக்கு 'Mesocardia, Situs Solitus CTGA, Large Subpulmonic VSD, Mild Coarctation of Aorta' உள்ளிட்ட பல சிக்கலான பிறவி இதயக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாகக் குழந்தையின் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை. அவளது இதயம் பலவீனமடைந்து வருவதால், உடனடியாக 'Coarctation Repair with PA Banding' என்ற அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளனர்.
தினக்கூலித் தந்தையின் தீராத போராட்டம்
குழந்தையைக் காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கான செலவு ₹3,00,000 (3 லட்சம் ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், குழந்தையின் தந்தை அன்சர், பழைய இரும்பு மற்றும் பேப்பர்களைச் சேகரிக்கும் ஒரு எளிய தொழிலாளி. தினமும் சைக்கிளில் வீதி வீதியாகச் சென்று அவர் உழைத்தால் கிடைக்கும் வருமானம் வெறும் ₹500 மட்டுமே. இந்தச் சொற்ப வருமானத்தைக் கொண்டு அன்றாட குடும்பச் செலவுகளையும், உணவையும் கவனிப்பதே அன்சருக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், 3 லட்சம் ரூபாய் என்ற பெரும் தொகையை அவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
"19 வருஷமா இந்தக் குழந்தைக்காகக் காத்துக்கிட்டிருந்தோம். இப்போ என் கண்ணு முன்னாடியே அவ மூச்சு விட கஷ்டப்படுறா. ஆனா, அவளைக் காப்பாத்த என்கிட்ட காசு இல்லையே..." என்று கண்ணீரோடு கலங்குகிறார் தந்தை அன்சர்.

இணையும் கரங்கள்; இயன்ற உதவி தேவை
ஒரு பிஞ்சுயிரின் வாழ்வும், ஒரு ஏழைக் குடும்பத்தின் 19 ஆண்டுகாலக் கனவும் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக, 'டாடுகெதர் ஃபவுண்டேஷன்' (Dotogether Foundation) மற்றும் 'லெட்ஸ் கான்ட்ரிபியூட்' (Let's Contribute) குழுவினர் இணைந்து இந்த நிதித் திரட்டலைத் தொடங்கியுள்ளனர்.
கொடையாளர்கள் நேரடியாகக் கீழே உள்ள வங்கி விவரங்கள் மூலம் தங்களின் பங்களிப்பை வழங்கி, இந்தப் பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்க உதவலாம்.
நன்கொடை வழங்கும் கொடையாளர்கள், அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ளத் தங்களின் பணப் பரிவர்த்தனை விவரங்களை (Transaction Details) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நம்முடைய சிறிய ஒரு பங்களிப்பு, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலத்தையும் மாற்றி அமைக்கும் என்பதில் ஐயமில்லை.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications