தலையிலிருந்து பிறந்தார்கள் என புராணத்தை நம்புவோர், நயன்தாரா குழந்தையை ஆய்வு செய்வது ஏன்?: வன்னியரசு
சென்னை: புராணங்களை நம்பும் பலர், நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தை பிறந்ததை ஆய்வு செய்வதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படப் பணிகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக அண்மையில் அறிவித்தனர். தங்களின் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மக்கள் சந்தேகம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரின் பதிவால் பலரும் 4 மாதங்களில் எப்படி குழந்தைப் பிறக்கும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாடகைத் தாய் குறித்த பேச்சுகளும், விவாதங்களும் அதிகரித்தது.

விசாரணைக் குழு
இதனைத் தொடர்ந்து வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. இந்த தம்பதியினர் சட்டத்தை முறையாக பின்பற்றி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார்களா என்ற விவாதம் எழுந்தது. தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

வன்னியரசு பேச்சு
இது ஒருபக்கம் இருக்க, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரால் கலாச்சாரம் சீரழிவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தது. இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசுகையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனை பலரும் திருமணம் முடிந்து 3 மாதங்கள் கூட ஆகவில்லை, எப்படி குழந்தைப் பிறந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புராணங்களை நம்பும் கூட்டம்
ஆனால் பிரம்மன் தலையில் பிராமணன் பிறந்தார் , தோளில் இருந்து சத்ரியன் பிறந்தார், தொடையில் இருந்து வைசியன் பிறந்தார், காலில் இருந்து சூத்திரன் பிறந்தார் என்று சொன்னால் நம்புகிற கூட்டம் தான், நயன்தாரா குழந்தை பிறந்ததை ஆய்வு செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications