ஹாட் சீட்டில் அமர்ந்த விஜய்! முதல்வர் நாற்காலியை பார்த்ததும் பிரமித்த தருணம்!
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் அறைக்குச் சென்ற விஜய், அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

முன்னதாக நாற்காலியில் அமருமாறு செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் விஜய் அந்த சீட்டை பார்த்ததும் வெட்கத்துடனும் ஆச்சரியத்துடனும் சிரித்தபடியே அமர்ந்தார்.
அவரை தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று 12 - 1.30 மணிக்கு எமகண்டம் என்பதால் அதற்குள் முதல்வர் சீட்டில் விஜய் அமர்ந்துவிட்டார். விஜய் முதல்வரான நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
234 தொகுதியின் எம்எல்ஏக்களுக்கும் நாளை காலை 9.30 மணிக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து மே 12 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்.
நேரு ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விஜய், மூவர்ணக் கொடி பொருத்தப்பட்ட அரசு காரில், பயணம் செய்தார். முதல்வராக பதவியேற்று தலைமைச் செயலகம் சென்ற போதிலும் முதல்வர் நாற்காலியில் கோட் சூட்டில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.
முன்னதாக முதல்வராக பதவியேற்றதும் விஜய் பேசுகையில், "எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும்.
#WATCH | Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay takes charge as the Chief Minister of Tamil Nadu, at the Tamil Nadu Secretariat. pic.twitter.com/dgL44WlzTg
— ANI (@ANI) May 10, 2026
மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை. உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள். நீ வா தம்பி நாங்க பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்.
தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். அப்படியான ஒரு நிலையில் தான் இந்த பொறுப்பை நான் கையில் எடுத்திருக்கிறேன். இவ்வாறு விஜய் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications