Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவிர கனமழை பெய்யும்.. தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் "ரெட் அலர்ட்".. வானிலை மையம் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்தது. கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது.

மதுரையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. சென்னையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னை

சென்னையில் அதிகாலையில் இருந்து அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக தமிழ்நாடு முழுமைக்கும் இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை அலர்ட்

நாளை அலர்ட்

அதேபோல் தமிழ்நாட்டிற்கு நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் மிக தீவிர கனமழை தமிழ்நாட்டில் பெய்யும். கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் காற்று வேகமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மஞ்சள் அலர்ட்

மஞ்சள் அலர்ட்

உத்தரகாண்ட், கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம் , மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு காற்று வேகமாக வீசும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+