வானிலையில் நடந்த அதிசயம்.. முன்கூட்டியே வருகிறது தென்மேற்கு பருவமழை.. எப்படி தெரியுமா?
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
படிப்படியாக இது மேலும் வலுவிழந்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை
இந்த நிலையில் அசானி புயல், கரீம் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 15ம் தேதியே தொடங்க உள்ளது. அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் மழை தொடங்கும்.

அசானி புயல்
இதனால் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் மாநிலங்களில் 1 வாரத்திற்கு முன்பாகவே மழை தொடங்கும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் இம்மாத கடைசி வாரத்திலேயே மழை தொடங்க போகிறது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் 1ல் தொடங்காமல் தள்ளிப்போக காரணம் உலக வெப்பமயமாதல்தான். ஆனால் அசானி புயல், கரீம் புயல் காரணமாக வெப்பநிலை குறைந்துள்ளது.

என்ன காரணம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இதனால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதுவே தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க காரணம் ஆகும். பொதுவாக பருவமழைக்கு இரண்டு - மூன்று நாட்களுக்கு முன் தாக்கும் புயல், பருவமழையை தாமதம் ஆக்கும். ஆனால் பருவமழைக்கு இரண்டு - மூன்று வாரங்களுக்கு முன் தாக்கும் புயல் பருவமழையை துரிதப்படுத்தும் என்பார்கள். அப்படிதான் இந்த முறை பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளது.

வானிலை அதிசயம்
கிட்டத்தட்ட வானிலை அதிசயம் போல இந்த நிகழ்வு நடந்துள்ளது. அந்தமானில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 15ம் தேதியே தொடங்க உள்ளது. அங்கு 22ம் தேதிதான் பருவமழை தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மற்றும் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழை
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடும் வெயிலுக்கு இடையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications