சரத்குமார், பச்சமுத்துவுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்கு காரணம்..அடித்து சொல்லும் மக்கள் நீதி மய்யம்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான் அதன் தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே அசுர வளர்ச்சி அடைந்ததால் அக்கட்சி மீது இந்த சட்டசபைத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இக்கட்சி 133 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 101 இடங்களில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் பச்சமுத்துவின் ஐஜேகேவும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் யாரும் வெல்லவில்லை.

கமல் கட்சி
வாக்கு சதவீதம் அடிப்படையில் முதலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படுதோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து நேற்றைய தினம் ஆழ்வார்பேடே்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல் ஆலோசனை நடத்தினார்.

நிறைய ஊர்கள்
அப்போது துணைத் தலைவர் பொன்ராஜ் பேசுகையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நிச்சயம் 3 ஆவது இடத்தை பிடித்திருக்கும். தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் நிறைய ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

தோல்வி
பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு முக்கிய காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் பெரும்பாலான தொகுதிகளில் வென்றிருக்கலாம். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான போதிய பொருளாதார வசதி இல்லை. கட்சியின் தொண்டர்களை கடன்காரர்களாக மாற்ற கூடாது என்பதால் கூட்டணி அமைத்தோம். ஆனால் அது இந்த முறை கை கொடுக்கவில்லை.

10 மடங்கு
தற்போது பெற்ற 12 லட்சம வாக்குகளை காட்டிலும் 10 மடங்கு பெற இப்போதே பணியாற்ற தொடங்குவோம் என்றார் பொன்ராஜ். கூட்டணி வைத்து போட்டியிட்டதை பெரும்பாலான நிர்வாகிகளும் சுட்டிக் காட்டினர். கூட்டணி வைத்த இருவருமே அதிமுக, திமுகவுடன் ஏற்கெனவே கூட்டணியில் இருந்ததால் அதுவும் தமக்கு மைனஸ் ஆகிவிட்டதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications