வாங்குன வரியை உள்ளாட்சி அமைப்புகள் என்னதான் செய்தன?குடிநீர் வாரியத்துக்கு ரூ484.10 கோடி கடன் பாக்கி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ484.10 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

- 10 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான செலவு 185.27% அதிகரிப்பு
- 10 ஆண்டுகளில் பணியாளர்கள் செலவு -31.11% ஆக குறைந்துள்ளது.
- 10 ஆண்டுகளில் ஓய்வூதிய செலவு/ குடும்ப ஓய்வூதியம் 137.37% அதிகரிப்பு
- 10 ஆண்டுகளில் மொத்தமாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கான செலவு 104.24% அதிகரிப்பு
- 1 கிலோ லிட்டர் குடிநீர் விநியோகிக்க செலவு ரூ20.81.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ10.42
- கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ8.11 என குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- ஆனால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரவேண்டிய குடிநீர் கட்டணம் நிலுவைத் தொகை (பாக்கி) ரூ484.10 கோடி.
- குடிநீர் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் தர வேண்டிய கடன் பாக்கி விவரம்:
- மாநகராட்சிகள் ரூ261.05 கோடி
- நகராட்சிகள் ரூ10.09 கோடி
- பேரூராட்சிகள் ரூ10.82 கோடி
- கிராம ஊராட்சிகள் ரூ202.14 கோடி
- குடிநீர் வடிகால் வாரியத்தில் மொத்த பணியாளர்கள் 2,583
- குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 9,101.
- குடிநீர் வாரியம் செலுத்த வேண்டிய கடன் ரூ2890.26 கோடி.

தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வாரியத்துக்கான கட்டண நிலுவைகளை உள்ளாட்சி அமைப்புகளால் செலுத்தவில்லை. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள்/ வாரியங்கள் வலுவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் மாநில அரசுக்கு கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்துகின்றன.
- சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கடன் ரூ1909.88 கோடி.
- சென்னையில் 1 கிலோ லிட்டருக்கான செலவு ரூ36.58
- 1 கிலோ லிட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை ரூ14.08












Click it and Unblock the Notifications