புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்
சென்னை: ஒவ்வொரு புயலுக்கு தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
Recommended Video
கொரோனா பரவலின் தாக்கம் உலகில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் இந்த உருமாறிய கொரோனா வகைகளை B.1.1.7, B.1.617 போன்ற ஆங்கில எழுத்து மற்றும் எண் காம்பினேஷன்களில் பெயரிடப்படும்.

உருமாறிய கொரோனா
இருப்பினும் இதைக் குறிப்பிடுவது கஷ்டம் என்பதால் ஊடகங்களும் மக்களும் பெரும்பாலும் எங்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதோ அதையே பெயராக வைத்து அழைக்கின்றனர். அதாவது பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட B.1.1.7 வகை கொரோனாவை பிரிட்டன் வகை கொரோனா என்றும் B.1.351 கொரோனா வகையைத் தென் ஆப்பிரிக்கா கொரோனா வகை என்றும் மக்கள் அழைக்கின்றனர். முதலில் கொரோனா வைரசை கூட வூஹான் வைரஸ் என்றே சிலர் குறிப்பிட்டனர்.

மத்திய அரசு
இது போல நாடுகளை வைத்து கொரோனா வகைகளை அழைப்பது அந்த நாடுகளைக் களங்கப்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. கடந்த வாரம்கூட B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், ஒவ்வொரு புயலுக்குத் தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் ஏற்படும் புயல்களுக்குக் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெயரிடும் வழக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய பெயர்கள்
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புதிய பெயரிடும் முறை விரைவில் தொடங்கும். அது புயலுக்கு அளிக்கப்படும் பெயர்களைப் போல இருக்கும். இதன் மூலம் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்படும் இடங்களைக் கொண்ட சில நாடுகள் களங்கப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும். அதுபோன்ற பெயர்களை வைப்பதன் மூலம் மக்களும் எளிதாக உருமாறிய கொரோனா பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications