புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்
சென்னை: ஒவ்வொரு புயலுக்கு தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
Recommended Video
கொரோனா பரவலின் தாக்கம் உலகில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் இந்த உருமாறிய கொரோனா வகைகளை B.1.1.7, B.1.617 போன்ற ஆங்கில எழுத்து மற்றும் எண் காம்பினேஷன்களில் பெயரிடப்படும்.

உருமாறிய கொரோனா
இருப்பினும் இதைக் குறிப்பிடுவது கஷ்டம் என்பதால் ஊடகங்களும் மக்களும் பெரும்பாலும் எங்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதோ அதையே பெயராக வைத்து அழைக்கின்றனர். அதாவது பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட B.1.1.7 வகை கொரோனாவை பிரிட்டன் வகை கொரோனா என்றும் B.1.351 கொரோனா வகையைத் தென் ஆப்பிரிக்கா கொரோனா வகை என்றும் மக்கள் அழைக்கின்றனர். முதலில் கொரோனா வைரசை கூட வூஹான் வைரஸ் என்றே சிலர் குறிப்பிட்டனர்.

மத்திய அரசு
இது போல நாடுகளை வைத்து கொரோனா வகைகளை அழைப்பது அந்த நாடுகளைக் களங்கப்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. கடந்த வாரம்கூட B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், ஒவ்வொரு புயலுக்குத் தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் ஏற்படும் புயல்களுக்குக் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெயரிடும் வழக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய பெயர்கள்
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புதிய பெயரிடும் முறை விரைவில் தொடங்கும். அது புயலுக்கு அளிக்கப்படும் பெயர்களைப் போல இருக்கும். இதன் மூலம் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்படும் இடங்களைக் கொண்ட சில நாடுகள் களங்கப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும். அதுபோன்ற பெயர்களை வைப்பதன் மூலம் மக்களும் எளிதாக உருமாறிய கொரோனா பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications