தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்?.. "அவர்"தாங்க!.. 28-இல் வெளியாகிறது அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
Recommended Video
தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டிகே ராஜேந்திரனின் பணிக்காலம் முடிவடைந்த போது கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதியை தமிழக அரசு நியமித்தது.
தமிழகத்தின் 29 ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதி பதவியேற்றார். வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த பதவி
இதையடுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார், சிங், கந்தசாமி உள்ளிட்டோரில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது.

தமிழக அரசு
இவர்களது பெயர்கள் அடங்கிய கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுத்து ஒப்புதல் வாங்க தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 பேரின் கோப்புகளில் இருந்து உள்துறை அமைச்சரகம் மூவரை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கும்.

நியமனம்
அந்த 3 பேரில் யாரேனும் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்து கொள்ளலாம். அதற்கான கோப்புகளையும் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற வேண்டும். ஒரு வேளை தமிழக அரசின் தேர்விற்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளிக்கவிட்டால், மத்திய அரசு தேர்வு செய்த மற்ற இருவரில் இருந்து ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும்.

அறிவிப்பு எப்போது?
தற்போது ரயில்வே துறை டிஜிபியாக உள்ளார். இவர் ஊழலுக்கு எதிரானவர். சுகாதாரம், தூய்மை இந்தியா, ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறை கொண்டவர். மிகவும் கண்டிப்பான அதிகாரியாவார். ஒரு அரசு மக்களிடம் நற்பெயரை எடுக்கவும் மக்களுக்கு நல்லது செய்யவும் இது போன்று கண்டிப்பான, ஊழலுக்கு எதிரான அதிகாரிகளை தேர்வு செய்வது முக்கியத்துவம் ஆகும். சைலேந்திர பாபுவை தேர்வு செய்ததற்கான அறிவிப்புகள் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications