மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்
சென்னை: கேதர் நாத் vs பீகார் அரசு (AIR 1962 SC 955) வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது: "அரசை விமர்சிப்பது மட்டும் குற்றமல்ல; வன்முறையைத் தூண்டினால் மட்டுமே குற்றம்." வினோத் துபா vs மத்திய அரசு (2021 SCC OnLine SC 414) வழக்கிலும் உச்சநீதிமன்றம் இதே கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மாரிதாஸ் கருத்துக்கள் தவறானவை அல்லது அவதூறானவை என விஜய் தலைமையின அரசு கருதினால், சட்டப்படி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரலாம். ஆனால் கருத்துக்குப் பதிலாக கைது செய்வது பாசிசத்தின் உச்சம் என்று அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான இன்பத்துரை கூறியுள்ளார்.
வலதுசாரி ஆதரவாளரான பிரபல யூடியூபர் மாரிதாஸ் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாகம், அமைச்சர்கள் கட்சிகள் ஆகியவை குறித்தும் வெளிப்படையாக அவரது யூடியூப் தளத்தில் மிக கடுமையான முறையில் விமர்சனம் செய்து, வீடியோ பதிவிட்டு வருகிறார். அண்மையில் அமைச்சர் கீர்த்தனா குறித்து அவர் பதிவிட்ட ஒரு ஏஐ புகைப்படமும், அதற்கு அவர் தனிப்பட்ட முறையில் கூறி கருத்துக்களும் பெரிய அளவில் சர்ச்சையானது. இதேபோல் ஆதவ் அர்ஜூனா குறித்தும் அவர் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஏஐ புகைப்படங்களை பயன்படுத்தி, அவர் பரப்பி வருவதாக தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இதையடுத்து சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று சென்னையிலிருந்து மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மதுரை மாநகர காவல் துறையுடன் இணைந்து சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து வீட்டிலிருந்த யூடியூர் மாரிதாஸை கைது செய்து அழைத்து சென்றனர்.
தவெகவின் புகார் தொடர்பாக மாரிதாஸ் மீது BNS 79 பெண்களின் மரியாதையை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் கூறுதல்; BNS 353 (2) சமூகப் பிரிவுகளுக்கிடையே வெறுப்பு அல்லது விரோதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் வெளியிடுதல்; IT Act 66D இணையதளம் வழியாக வெளியிடப்பட்ட வீடியோ தொடர்புடைய குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, பெண்களின் கண்ணியம் மற்றும் டிஜிட்டல் குற்றம் சார்ந்த மிகப் பெரிய கூட்டு வழக்காக போடப்பட்டுள்ளதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக வழக்கறிஞர் அணி செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான இன்பத்துரை, "கேதர் நாத் vs பீகார் அரசு (AIR 1962 SC 955) வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது: "அரசை விமர்சிப்பது மட்டும் குற்றமல்ல; வன்முறையைத் தூண்டினால் மட்டுமே குற்றம்." வினோத் துபா vs மத்திய அரசு (2021 SCC OnLine SC 414) வழக்கிலும் உச்சநீதிமன்றம் இதே கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மாரிதாஸ் கருத்துக்கள் தவறானவை அல்லது அவதூறானவை என விஜய் தலைமையின அரசு கருதினால், சட்டப்படி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரலாம்.ஆனால் கருத்துக்குப் பதிலாக கைது செய்வது பாசிசத்தின் உச்சம்" இவ்வாறு கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், 'என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்' என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி














Click it and Unblock the Notifications