பந்தல் கூட ஓகே.. அது ஏன் மைக் செட்.. சென்னை டாஸ்மாக்களில் ஏன் இந்த திடீர் ஏற்பாடு.. இதுதான் காரணம்!
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் இந்த கடைகள் திறக்கப்பட உள்ளது.
கடந்த மே 7ம் தேதி சென்னையை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. தற்போது சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான ஆலோசனை மற்றும் திட்டமிடலுக்கு பின் அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.
சென்னையில் காலை 10 முதல் இரவு 7 மணி வரை கடை இருக்கும். சென்னையில் டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்படும். ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் கடை இருக்காது.

சென்னை டாஸ்மாக்
சென்னை டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக நீண்ட வரிசை அமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெரிய அளவில் கம்புகளை வைத்து தடுப்புகளை உருவாக்கி வரிசை அமைத்து உள்ளனர். டாஸ்மாக் கவுண்டருக்குள் ஒருவர் செல்ல வேண்டும் என்றால், நான்கு வரிசைகளை கடந்துதான் செல்ல வேண்டும். சமுக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இதை செய்துள்ளனர்.

ஒரு போலீசார்
அதேபோல் ஒரு டாஸ்மாக்கிற்கு மொத்தம் 5 போலீசார் வீதம் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். இதனால் இந்த 500 ஆட்களுக்கு மேல் யாராவது வரிசையில் நின்றால் அவர்களை உடனே வெளியே அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவிழா ஏற்பாடு
சென்னையில் நடக்கும் இந்த டாஸ்மாக் ஏற்பாடுகள் திருவிழா போல இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆம் இதற்காக எல்லா டாஸ்மாக்கிலும் சென்னையில் மைக் செட் வைத்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், திருவிழாக்களில் இப்படி மைக் செட் வைப்பது வழக்கம். அதேபோல்தான் சென்னையில் டாஸ்மாக் வாசலில் இதேபோல் மைக் செட் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஏன் இப்படி
இப்படி மைக் செட் வைப்பதற்கு என்ன காரணம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் கூட்டம் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது . ஒவ்வொரு டோக்கன் தீர்ந்த பின்பும் அதை மைக்கில் அறிவிப்பார்கள். அதேபோல் என்ன மது வகைகள் எல்லாம் காலியாகிவிட்டது. எது எல்லாம் கிடைக்காது என்று மைக்கில் அறிவிப்பார்கள். இதன் மூலம் வரிசையில் நிற்பவர்கள் என்ன வாங்கலாம் என்று எளிதாக முடிவு செய்து கொள்ள முடியும்.

வரிசையில் வந்தனர்
பலர் வந்து வரிசையில் நிற்பதை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். அதேபோல் வரிசையில் நிற்பவர்களை கட்டுப்படுத்தும் வகையிலும் போலீஸ் மைக் மூலம் அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள். இதற்காக பெரிய அளவில் சாமியான பந்தல் போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் முகக்கவசம் அணிதல், 3 அடி இடைவெளி விடுதல், ஒருவருக்கு ஒரு டோக்கன் என்று நிறைய விதிகளுக்குட்பட்டு இன்று முதல் மீண்டும் மதுக்கடைகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications