Vijay Government Formation LIVE: தமிழ்நாட்டின் சிஎம் ஆகிறார் விஜய்.. ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி விஜய் நாளை காலை ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
விஜய்யுடன் செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் திங்கட்கிழமை பதவியேற்கிறார்கள்.

ப சிதம்பரம் விஜய்க்கு வாழ்த்து
தலைவர் விஜய்க்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! நிலையான நல்லாட்சி தருக! உயர் பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்குப் பயன் தரும் நலத்திட்டங்களையும் தங்கள் அரசு தரவேண்டும் என்று விழைகிறேன் என ப சிதம்பரம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் த.வெ.க.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 9, 2026
தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! 💐
நிலையான நல்லாட்சி தருக!
உயர் பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்குப் பயன் தரும் நலத்திட்டங்களையும் தங்கள் அரசு தரவேண்டும் என்று விழைகிறேன்
சிஎம் விஜய்.. தொண்டர்கள் ஆரவாரம்!
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்கும் நிலையில் தமிழகம் முழுக்க பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அவர்கள், “முதல்வர் விஜய்.. முதல்வர் விஜய்” என கோஷம் எழுப்பி, விஷில் ஊதி உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்..
விஜய்க்கு வைகோ வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு, ம.தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மை கோட்பாட்டையும், சமூக நீதியையும் பாதுகாக்கின்ற அரசாக உங்களுடைய ஆட்சி அமைந்திட விழைகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.
காங்கிரசில் இருவருக்கு அமைச்சர் பதவி?
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக விஜய் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதன்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார் (காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர்) மற்றும் விஸ்வநாதன் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புஸ்சி ஆனந்துக்கு நகராட்சி நிர்வாகத் துறை?
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்க உள்ள நிலையில், செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புஸ்சி ஆனந்துக்கு நகராட்சி நிர்வாகத் துறை?
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்க உள்ள நிலையில், செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு தந்தை சந்திரசேகர் அறிவுரை
தமிழகத்தின் முதல்வராக சி.ஜோசப் விஜய் நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், “விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ‘தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்’ என்பதுதான்.. விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்” என்று கூறினார்.
தமிழகத்தில் முதல் முறை கூட்டணி ஆட்சி
விஜய்யின் தவெக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டுமே தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்திலும் பங்குகொள்கிறது. நாளை விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், கூடவே 9 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். மேலும் காங்கிரசுக்கு இந்த அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
விஜய்யை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம்
மக்கள் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு சாலையின் இருபுறமும் நின்றிருந்த தவெகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்று உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விஜய்யும் தொண்டர்களின் வாழ்த்துக்களை வணக்கம் கூறி ஏற்றுக்கொண்டார்..
விஜய்யை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம்
மக்கள் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு சாலையின் இருபுறமும் நின்றிருந்த தவெகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்று உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விஜய்யும் தொண்டர்களின் வாழ்த்துக்களை வணக்கம் கூறி ஏற்றுக்கொண்டார்..
சி.ஜோசப் விஜய் எனும் நான்.. நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்!
தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மை கிடைத்த நிலையில் விஜய் இன்று 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சந்திப்பு இப்போது முடிந்துள்ளது.
விஜய்யை இன்றே ஆட்சி அமைக்க அழைக்கிறாரா ஆளுநர்?
விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநர் அர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை, பெ சண்முகம் உள்ளிட்டோரும் விஜய்யுடன் வந்திருந்தனர். பெரும்பான்மையை காட்டியுள்ளதால் இன்று இரவே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது
மீண்டும் தயாராகும் நேரு அரங்கம்!
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், விரைவில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை பிற்பகல் 3.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விழா அரங்கில் இருக்கைகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விஜய் பதவியேற்பு விழா நாளை பிற்பகல் 3.15 மணியளவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். இதில் செங்கோட்டையன், அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரசுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மை கிடைத்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பானது நடந்தது. நாளை பிற்பகல் 3.15 மணிக்கு பதவியேற்பு விழா நடக்க உள்ளது எனவும், விஜய்யோடு சேர்த்து 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
READ MORE
More From
-
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்!












Click it and Unblock the Notifications