Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழிசை பயணித்த வழியில் சாலையோரம் நின்ற ‘மர்ம’ கார்.. அலறியடித்து ஓடிவந்த பாம் ஸ்குவாட்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செல்லும் வழியில் சாலையோரம் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வருகையையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழிசை சௌந்தரராஜன் செல்லவிருந்த கோவை அவிநாசி சாலையில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

கோவை உக்கடம் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேசா முபின் பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஜமேசா முபின் கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெடி பொருட்கள், சதி என விவகாரம் பெரிதாக இருப்பதால் விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

பாதுகாப்பு தீவிரம்

பாதுகாப்பு தீவிரம்

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்தும், கோவை வெடி விபத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. உளவுத்துறை, காவல்துறையை பலப்படுத்துவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை செல்லும் வழியில்

ஆளுநர் தமிழிசை செல்லும் வழியில்

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது உறவினர் இல்லத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வருகை தந்தார். அவர் வரும் வழியில் வழக்கத்தை விட தீவிரமாக பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

சல்லடை போட்ட வெடிகுண்டு நிபுணர்கள்

சல்லடை போட்ட வெடிகுண்டு நிபுணர்கள்

தமிழிசை செல்லும் வழியான கோவை - அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரம் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை எடுக்க நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். அந்த கார் முழுவதும் சோதனை செய்யப்பட்டதில், அதில் வெடிகுண்டுகளோ, வெடிபொருட்களோ ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.

கார் உரிமையாளர்

கார் உரிமையாளர்

அதைத் தொடர்ந்து காரின் உரிமையாளர் கண்டறியப்பட்டு, அவரிடம் கார் ஒப்படைக்கப்பட்டது. அந்த காரின் உரிமையாளர் காரை நிறுத்திவிட்டு, அலுவலகத்திற்குச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அவரை அங்கிருந்து காரை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கார் வேட்டை

கார் வேட்டை

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கோவை முழுவதும் சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார்களை போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். நேற்று 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 கார்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+