பெண்ணாக பிறந்திருக்கலாமோ என நினைத்திருக்கிறேன்! எனக்கு ரெண்டு பொண்ணு மட்டும் இல்லை! உருகிய கமல்ஹாசன்
கோவை : இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக நடித்து இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்து இருக்கலாமோ என்று நினைத்திருக்கின்றேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, மகளிருக்கான மய்யம் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

கமலஹாசன்
பின்னர் விழாவில் பேசிய கமலஹாசன்," உலகில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள் எனவும், மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும். புலம்புவதால் பிரயோஜனம் இல்லை. காந்தி வந்தவுடன் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. பொறுமையாக இருந்து தன் பணியை செய்து முடித்து விட்டு போனார். பார்வையாளர்கள் அனைவருமே மாற்றத்தின் விதைகள். பீடிகைகளுக்கு நேரமில்லை, வேலையில் இறங்கனும், அதைத்தான் நாங்கள் செய்கின்றோம்

பெண்ணாக பிறந்த இருக்கலாமோ
மகாத்மா என்று காந்தியை நான் கூப்பிடுவதில்லை, நான் அவர் சந்ததி என நம்புகின்றேன். இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக நடத்தி இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்த இருக்கலாமோ என்று நினைத்திருக்கின்றேன். பெருமை படக்கூடிய பிறவி பெண். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை என சொல்கின்றனர். அது இல்லை .

பெற்றால்தான் பிள்ளையா
தெரியாமல் நிலவும் பல அவலங்கள் இங்கு உண்டு.35 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதிக்கபட்ட பெற்றோரால் பாசிட்டிவ் ஆன குழந்தைகள். அவர்களில் பிழைக்க வாய்ப்பில்லை என்ற 2000 குழந்தைகளை தேர்வு செய்து அதன் தந்தையாக இருக்க பெற்றால்தான் பிள்ளையா என்ற அமைப்பை உருவாக்கினோம். அதற்கு மருந்தை கண்டு பிடித்தார்கள்.

பெண்களுக்கு ஊதியம்
சிறிய விழுக்காடு மரணத்தை தவிர பலர் அதில் பிழைத்து பல்வேறு பணிகளில் இருக்கின்றனர். பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் மூலம் அதை செய்ய முடிந்தது. பெண்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும், தாய் நாடு, தாய் மண் என்று சொல்கின்றனர் , ஆனால் ஊதியம் வழங்குவதை பின்னர் செஞ்சிலாம் என்ற வாக்குறுதி கொடுக்கின்றனர் எனவும் அது போதாது, வாக்குறுதியை, அழுத்தம் கொடுத்துசெய்ய வைக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications