எஸ்.பி.வேலுமணிக்கு கடும் சிக்கல்! 13 பேர் மீது பாய்ந்த வழக்கு! லஞ்ச ஒழிப்புத்துறை கிடுக்கிப்பிடி
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
இதன் மூலம் இனி வரும் நாட்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கடிகள் மேலும் முற்றலாம் எனத் தெரிகிறது.
கடந்தமுறை போல் வெறும் சோதனை என்பதுடன் முடித்துக்கொள்ளாமல் இந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்
அதிமுக ஆட்சியில் மிகவும் பவர்ஃபுல் அமைச்சராக வலம் எஸ்.பி.வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் என 13 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை இது போல் சோதனை நடத்தப்பட்டாலும் இப்போது இன்று நடைபெற்ற சோதனையில் அதீத வேகமும், தீவிரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மத்தியில் காண முடிகிறது.

ரூ.58.23 கோடி
இன்று அதிகாலை முதல் கோவை, சென்னை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கேரளா என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் ஜல்லடை போட்டு ஜலித்து தேடி வருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலுமணி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி ரூபாய் அதாவது 3,928% கூடுதலாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2-வது ரெய்டு
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்ற சொத்து விவரங்களுக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த சொத்து விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் அசுர மாற்றம் இருந்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் இரண்டாவது ரெய்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகத் தீவிரம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்க முடியாதபடி சட்ட நுணுக்கங்களை தீர்க்கமாக ஆராய்ந்த பிறகே லஞ்ச ஒழிப்புத்துறை சாட்டையை அதிரடியாக சுழற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தன் வீடு மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டு குறித்து இன்று மாலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications