நகையை அடகு வைத்து... இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகள் வாங்கிக் கொடுத்த கோவை தம்பதி..!
கோவை: கோவை சிங்காநல்லூரில் இயங்கிவரும் இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு, நகையை அடகு வைத்து 100 மின் விசிறிகள் வாங்கிக் கொடுத்த தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறார்கள் அந்தக் கோவை தம்பதியினர்.
100 ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு அதை ஆயிரம் ரூபாயாக கதை அளந்துவிடும் விளம்பர பிரியர்களுக்கு மத்தியில், தங்கள் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிட வேண்டாம் என அந்த நல்ல உள்ளங்கள் கேட்டுள்ளன.

குளிர்சாதன வசதி
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையானது, மாதம் இருபத்து ஓராயிரம் மற்றும் அதற்கு குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்காக இயங்கி வருகிறது. அந்த வகையில் தொழில் நகரமான கோவையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னல்
இந்நிலையில் கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு மின்விசிறிகள் இல்லாமல் நோயாளிகள் படும் இன்னலை நேரில் பார்த்தவுடன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என அங்கேயே அவர்கள் முடிவெடுத்து விட்டனர்.

ரூ.2,20,000 பணம்
இதையடுத்து தங்களிடம் பணம் இல்லாத சூழலிலும், கையில் இருந்த நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீனை சந்தித்துள்ளனர். தாங்கள் கொடுக்கும் தொகையை பெற்றுக்கொண்டு 100 மின் விசிறிகள் வாங்கி பொருத்துமாறு கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்டு வியப்படைந்த டீன், நீங்களே சிரமப்படும் போது எதற்கு இவ்வளவு தொகை, 4 மின் விசிறிகள் வேண்டுமானால் வாங்கிக் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

மருத்துவமனை டீன்
ஆனால் அந்த தம்பதியோ, காற்றில்லாமல் நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்த பிறகு தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனக் கூறி 100 மின் விசிறிகளை தங்கள் பணத்தில் வாங்கி பொருத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து இது குறித்த விவரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் பெற்றுக் கொள்ளுமாறு கூறியதற்கு பிறகு இ.எஸ்.ஐ.மருத்துவமனை டீன் அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

காற்றில்லை
இதனிடையே கோவை சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையானது முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏ.சி. இயக்கப்படாமல் இருக்கிறது. இதனால் தான் நோயாளிகள் காற்றில்லாமல் சிரமப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications