தமிழக ஆளுநர் தகவல் கேட்டதில் தவறில்லை.. அனைத்தையும் அரசியலாக்குவதா?- புதுவை ஆளுநர் தமிழிசை
கோவை: தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிய தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ''"தமிழக ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்குவதற்கு அரசு செயலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்'
தலைமைச் செயலாளர் செய்திருந்த அறிவிப்பு அரசியல் சர்ச்சையாக மாறியது. தமிழக அரசியலில் ஆளுநர் தலையீடுகிறார் என்று செய்திகள் வேகமாக பரவின. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கமான நடைமுறை
''இது மாநில அரசு பின்பற்றும் வழக்கமான நடைமுறைதான்; ஆனால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது'' என்று தலைமைச்செயலாளர் இறையன்பு விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனால் இந்த விவகாரம் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
அப்போது தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிராரோ? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. மாநில அரசின் செயல் திட்டம் குறித்து ஆளுநர் தகவல் கேட்டது தமிழகத்தில் சர்ச்சையாகி உள்ளது.

நானும் தகவல்கள் கேட்டு இருக்கிறேன்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் நானும் தகவல்கள் கேட்டு இருக்கிறேன். அடுத்த மாதம் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் மத்திய அரசுக்கு கொடுப்பதற்காக மாநில அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்கள் பெறப்படுகிறது. இது எதார்த்தமாக இயல்பாக நடந்தது. ஆனால் இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகிறார்கள்.

முழு ஒத்துழைப்பு வேண்டும்
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அரசுகள் ஆளுநருக்கு தகவல் கொடுப்பதில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருக்கும் கட்சிகள் புதுவையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பேசி வருகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications