வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம்
கோவை: டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் வேகமாக சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில் இன்னொரு வழக்கில் டிடிஎப் வாசனை நேற்று சூலூர் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த வந்த, ‛‛நான் வேகமாக சென்றது தவறுதான். இனி வேகமாக செல்ல மாட்டேன்'' என கூறியுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் 22 வயது வாசன். யூடியூப் சேனல் நடத்தி வரும் பைக்கில் வேகமாக சென்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்து வருகிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று பைக்கில் சாகசம் செய்து வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

243 கிமீ வேக பயணம்
இவர் சமீபகாலமாக பைக்கில் வேகமாக சென்று சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு 243 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் சென்ற வீடியோ வெளியானது. இது பெரும் விவாதப்பொருளானது. டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் போலீஸ் நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் செய்யப்பட்டன.

ஜிபி முத்துவுடன் பயணம்
இதற்கு மத்தியில் தான் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன், டிடிஎப் வாசன் பைக்கில் ஒரு ரைட் செய்தார். இதில் டிடிஎப் வாசன் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் ஜிபி முத்து தலைக்கவசம் அணியவில்லை. இந்நிலையில் தான் டிடிஎப் வாசன் சாலையின் எதிர்ப்புறத்தில் வாகனங்கள் வந்தாலும் கூட அதனை பொருட்படுத்தாமல் வேகமாக பைக் ஓட்டினார். அவர் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி சென்றார். இதில் பயந்துபோன ஜிபி முத்து பயம் கலந்த மகிழ்ச்சியில் அலறினார்.

போத்தனூர் வழக்கில் சரண்
இதுதொடர்பான வீடியோவும் இணையதளத்தில் வேகமாக பரவியது. கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கோவை பாலக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய யூடியூபர் வாசன் மீது கோவை போத்தனூர், சூலூர் போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். இதில் போத்தனூர் போலீஸ் வழக்கு தொடர்பாக டிடிஎப் வாசன் சில நாட்களுக்கு முன்பு சரணடைந்து ஜாமீன் பெற்றார். இருப்பினும் சூலூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்தனர்.

மீண்டும் கைது-ஜாமீன்
இந்நிலையில் சேலம் -கொச்சின் நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் பைக்கை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை சூலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பெங்களூர் சென்ற நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை போலீசார் ஜாமீனில் வெளியே விட்டனர். இதுபற்றி டிடிஎப் வாசன் கூறியதாவது:

வேகமாக போகமாட்டேன்
‛‛இன்று (அதாவது நேற்று)சூலூர் போலீஸ் வந்துருக்கிறேன். வழக்கு போடப்பட்டு இருந்தது. அதுசம்பந்தமாக தான் வந்தேன். நான் ஸ்பீடா போனது தப்புனு உணர்ந்து ஏற்கனவே வீடியோவாக பதிவிட்டு இருந்தேன். இனிமேல் வேகமாக போகமாட்டேனும் ஸ்டேஷனில் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்.

தவறுதான் இனி செய்யமாட்டேன்
நான் சமீபத்தில் கோட் அணிந்து ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தேன். சில மீடியாக்கள் அதனை காவல் துறையை சீண்டுவதாக போலியாக செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன. உண்மையில் நான் சவால் எதுவும் விடவில்லை. நார்மல் வீடியோவை எடுத்து தவறான வகையில் செய்தியாக வெளியிட்டு விட்டனர். நான் படிப்படியாக வேகத்தை குறைத்து வருகிறேன். நான் வேகமாக சென்றது தவறு தான். இனிமேல் அதனை செய்யமாட்டேன்'' என கூறியுள்ளார்.

முந்தைய வீடியோவில் கூறியது என்ன?
முன்னதாக 3 நாட்களுக்கு முன்பு டிடிஎப் வாசன் ஊடகங்களை எச்சரிக்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இந்த டிடிஎப் பவர் தெரியாமல் நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க தோணுது.. ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நான் நினைச்சிட்டு இருக்கேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது. எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லையை கடந்து செல்கிறீர்கள்.. அதுக்கும் மேல போன, எல்லா யூ டியூபர்ஸும் சேர்ந்து நீங்கள் பண்ணும் வேலைகள் பற்றி பேச வேண்டி இருக்கும். எனவே, கட்டுப்பாடுடன் இருந்துகோங்க.. பொய் செய்தி எல்லாம் பரப்பாதீங்க. இது மிரட்டல் எல்லாம் கிடையாது'' என வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அவர் தான் செய்தது தவறுதான் எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications