"பிளேட்டை" மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்.. வசமாக சிக்கி.. 1 லட்சம் அபராதம் போட்ட கமிஷன்.. என்னாச்சு?
இன்ஸ்பெக்டருக்கு மனித உரிமை கமிஷன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது
கோவை: ஒரு சாதாரண குடும்ப பிரச்சனையை, வரதட்சணை வழக்காக மாற்றி உள்ளார் ஒரு பெண் இன்ஸ்பெக்டர்.. என்ன நடந்தது?
கோவை மாவட்டம் சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்.. இவர் ஒரு என்ஜினீயர்... இவர் சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2019-ல் இவருடைய மனைவி, திடீரென விஜயகுமார் மீது கோவை துடியலூர் மகளிர் போலீஸில் புகார் தந்தார்.. அந்த புகாரை அப்போது பெற்றுக் கொண்டவர் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை என்பவராவார்.

மீனாம்பிகை
புகாரை பெற்றதுடன், விஜயகுமார் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகவும் கைது செய்தார் மீனாம்பிகை. ஆனால், வழக்கு பதிவு செய்ததும் விஜயகுமாரை விசாரிக்கவில்லை என தெரிகிறது.. இதையடுத்து, விஜயகுமார் 5 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்... இதனிடையே மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார் விஜயகுமார்.

வரதட்சணை
அந்த புகார் மனுவில், "என் மனைவி என் மீது கொடுத்த புகார் சாதாரணதுதான்.. அது வெறும் குடும்ப தகராறு தொடர்பானதுதான்... ஆனால் அந்த புகாரை முறையாக விசாரிக்காமல் என் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் தவறாக வழக்குப்பதிவு செய்து ஜெயிலிலும் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை என்னை அடைத்துவிட்டார்.. அதனால், மனஉளைச்சலை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயகுமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.

இழப்பீடு
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.. அந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.. இதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் அதிரடியாக தெரிவித்துள்ளது.

அல்லிநகரம்
ஒரு சாதாரண குடும்ப பிரச்சனையை வரதட்சணை வழக்காக மாற்றிய இன்ஸ்பெக்டருக்கு மனித உரிமை கமிஷன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இப்படித்தான், சில மாதங்களுக்குமுன்பு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அல்லிநகரம் பெண் இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications