5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்!
கோவையில் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Recommended Video
கோயம்புத்தூர்: கோவையில் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் இன்று அதிகாலையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புயல்வேக நடவடிக்கை மூலம் அங்கு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடும் சோதனை
இந்த நிலையில் காலை 5 மணியில் இருந்து தொடர்ந்து 4 மணி நேரமாக அங்கு சோதனை நடந்து வருகிறது. உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மொத்தம் 15 வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் 4 அதிகாரிகள் அல்லது 3 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஐந்து இடங்கள்
இதில் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள 5 பகுதிகளை குறி வைத்துள்ளனர். அவிநாசி பகுதிகளில் முக்கியமாக அதிகமாக சோதனை நடந்து வருகிறது. அதேபோல் உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகரில் சோதனை நடக்கிறது. சேலம் அருகே இருக்கும் கோவை கிராமங்களில் சோதனை அதிகமாக நடைபெற்று வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சோதனை
மேலும் கோவையை சேர்ந்த ஜாபர் அலி, சலீம் உள்ளிட்ட சிலர் வீடுகளில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. பொதுவாக சோதனை நடந்து முடிந்த பின் அங்கிருந்து அதிகாரிகள் வெளியேறுவது வழக்கம். ஆனால் இவர்களின் வீடுகளில் சோதனை நடந்து முடிந்தாலும் கூட அதிகாரிகள் இன்னும் அங்கிருந்து வெளியேறவில்லை.

என்ன கடுமை
சோதனை செய்யப்பட்ட வீடுகளில் இருந்து செல்போன், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் முக்கிய ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications