தனியே சிக்கிய சிறுமி! தாழ்ப்பாள் போட்டதால் பஞ்சரான ’பாஸ்டர்’..! போக்சோவில் கம்பியை கவுண்டிங்!
கோவை : கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத போதகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவையில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ்.
ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. சரசரவென சுட்டுத்தள்ளிய 22 வயது இளைஞர்.. நடுங்கும் சிகாகோ
சிறுமி உள்ள பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜெபம் செய்து வருகிறார்.
அதிர்ச்சி சம்பவம்
தமிழ்நாடு ,கர்நடாகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று ஜெபம் செய்து வரும் ஸ்டீபன் ராஜ் நேற்று சிறுமி உள்ள பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் பாட்டி நேற்று இரு சிறுமிகளையும் வீட்டிற்குள் வைத்து தாளிட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
கிறிஸ்துவ பாஸ்டர்
இதனை நோட்டமிட்ட ஸ்டீபன்ராஜ் சிறுமியின் வீட்டின் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சிறுமியின் தங்கையை ஒரு அறையில் வைத்து தாளிட்ட ஸ்டீபன்ராஜ், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
போலீசில் புகார்
அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதால் ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், சிறுமி இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதிரடி கைது
விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தினர்.